பிரதேசத்தை சோகத்திற்கு உள்ளாக்கிய பாடசாலை மாணவரின் மரணம்!!

Monday, 15 October 2018 - 15:32

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%21%21
காலி - படபொல - கல்யானதிஸ்ஸ மாவத்தையில் தனியார் பேரூந்தொன்று மீது உந்துருளியொன்று மோதி இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்துள்ளார்.

தனது தந்தையுடன் இன்று காலை உந்துருளியில் பாடசாலைக்கு சென்றுக்கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

படபொல - கல்யானதிஸ்ஸ பாடசாலையில் தரம் 8இல் கல்வி கற்று வந்த மாணவரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் பேரூந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.