திருமணமான ஆணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளம் பெண்..! பின்னர் நடந்த விபரீதம்!!

Tuesday, 16 October 2018 - 12:11

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D..%21+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%21%21
இளம்பெண் ஒருவர் திருமணமான ஆண் ஒருவருக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததால் விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று மும்பையில் இடம்பெற்றுள்ளது.

மும்பை பர்பானி மாவட்டத்தை சேர்ந்தவர் சச்சின் மித்காரி(38). இவர் மருத்துவமனை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் மித்காரியுடன் வேலை பார்க்கும் இளம்பெண் ஒருவர், அவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் என் ஆசைக்கு இணங்க மறுத்தால், என்னை துஸ்பிரயோகம் செய்ய முயன்றாய் என உன் மீது வழக்கு போட்டுவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த மித்காரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மித்காரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், மித்காரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த பெண் மீது வழக்குப் பதிந்து காவற்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.