அரசாங்கத்தில் இருந்து விலகிய 15 பேர் கொண்ட நாடாளுமன்ற குழுவின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று இடம்பெறவுள்ள சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஶ்ரீலங்கா சுந்திர கட்சி, தேசிய அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என கடந்த செயற்குழு கூட்டத்தில் இந்த குழு பரிந்துரைத்திருந்த நிலையில் , இது தொடர்பில் மேலும் விடயங்களை தௌிவு படுத்துவதற்காக தமது அணியில் இருந்து சிலர் இன்றைய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று மாலை ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதன்போது கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பிலும், கிராமியப் புரட்சி மற்றும் என்டர்ப்ரைஸ் சிறிலங்கா அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.
ஶ்ரீலங்கா சுந்திர கட்சி, தேசிய அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என கடந்த செயற்குழு கூட்டத்தில் இந்த குழு பரிந்துரைத்திருந்த நிலையில் , இது தொடர்பில் மேலும் விடயங்களை தௌிவு படுத்துவதற்காக தமது அணியில் இருந்து சிலர் இன்றைய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று மாலை ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதன்போது கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பிலும், கிராமியப் புரட்சி மற்றும் என்டர்ப்ரைஸ் சிறிலங்கா அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.