அட்டன் - டிக்கோயா சவூத் வனராஜா பகுதியில் வாடி வீடு ஒன்றின் வளாகப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா செடியை வளர்த்து வந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, இன்று மாலை 3.00 மணியளவில் அட்டன் காவல்துறையால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 3 கஞ்சா செடிகள், காவல்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஒரு கஞ்சா செடியின் உயரம் ஒரு அடியும், மற்றைய இரண்டும் சிறிய செடிகள் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவர் தனது வாடி வீட்டு முற்றத்தில் இச்செடிகளை வளர்த்து வந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த கஞ்சா செடிகளையும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் நாளைய தினம் அட்டன் நீதிமன்றில் பிரசன்னப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அட்டன் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, இன்று மாலை 3.00 மணியளவில் அட்டன் காவல்துறையால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 3 கஞ்சா செடிகள், காவல்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஒரு கஞ்சா செடியின் உயரம் ஒரு அடியும், மற்றைய இரண்டும் சிறிய செடிகள் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவர் தனது வாடி வீட்டு முற்றத்தில் இச்செடிகளை வளர்த்து வந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த கஞ்சா செடிகளையும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் நாளைய தினம் அட்டன் நீதிமன்றில் பிரசன்னப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அட்டன் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.