கிணற்றை சுத்தம் செய்த ஊழியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

Thursday, 18 October 2018 - 13:21

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%21%21+
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச சபை வளாகத்தில் அமைந்துள்ள கிணற்றொன்றில் இருந்து அபாயகரமான வெடிகுண்டுகள் சில நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் குறித்த வெடிப்பொருட்கள் இருப்பத்தை கண்டு புதுக்குடியிருப்பு காவற்துறைக்கு அறிவித்துள்ளனர்.

இதன் போது 9 எரிகணைகள் மீட்கப்பட்டுள்ளன.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள்  முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற உத்தரவின் படி அழிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.