ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டேன் - குற்றச்சாட்டை ஒப்பு கொண்டுள்ள முன்னாள் கிரிக்கட் வீரர்!!

Thursday, 18 October 2018 - 14:16

%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%21%21
பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் டனீஷ் கனீரியா, ஆட்டநிர்ணய சதிக்குற்றச்சாட்டை ஒப்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அல் ஜெசீரா ஊடகத்திடம் அவர் இந்த தகவலை வழங்கியுள்ளார்.

2012ம் ஆண்டு ஆட்டநிர்ணய சதி தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கட் சபை டனிஸ் கனேரியாவிற்கு தடை விதித்திருந்தது.

எனினும் அவர் கடந்த காலங்களில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வாதிட்டு வந்துள்ளார்.

மேலும் அவருக்கு சர்வதேச கிரிக்கட் பேரவையால் விதிக்கப்பட்ட ஆயுட்கால தடைக்கு எதிராக பல சந்தர்ப்பங்களில் மேன்முறையீடு செய்தும் தடையை நீக்கிக் கொள்ள முடியவில்லை.

இந்தநிலையில் தற்போது உண்மையை ஒப்புக் கொள்ளும் பக்குவத்தைப் பெற்றிருப்பதாகவும், பொய்யை சுமந்துக் கொண்டு வாழ முடியாது என்பதை உணர்ந்திருப்பதாகவும் டனிஸ் கனேரியா கூறியுள்ளார்.

2009ம் ஆண்டு செம்டம்பர் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற பிராந்திய போட்டியொன்றில் அவர் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டுள்ளார்.

அவருடன் இணைந்து இந்த சதியைப் புரிந்தமைக்காக, எசக்ஸின் முன்னாள் வீரர் மேர்வின் வெஸ்ட்ஃபீல்ட்டுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.