கோர விபத்தில் 04 பேர் பலி..!!

Friday, 19 October 2018 - 8:57

%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+04+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF..%21%21
தனியார் பேருந்தும், பாரவூர்தியும் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னையில் இருந்து திருச்சி நோக்கி தனியார் பேருந்து ஒன்று அஜீஸ் நகர் அருகில் வந்தபோது தனியார் பேருந்து பாரவூர்தியுடன் மோதியுள்ளது. 

இதில் பேருந்து தீப்பிடித்து எரிந்து 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.

தகவலறிந்து அங்கு சென்ற மீட்புப்படையினர் தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 
இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.