பேசாலையில் மீன்பிடித் துறைமுகத்தை அமைக்க தீர்மானம்

Friday, 19 October 2018 - 13:22

%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
பேசாலையில் மீன்பிடித் துறைமுகத்தை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் கடற்றொழில் அடிப்படை வசதிகளை மேலும் மேம்படுத்துதல், நீர்வாழ் உயிரின உற்பத்தியையும், வாழ்வாதார அபிவிருத்தியையும் மேம்படுத்துவது இதன் நோக்கமாகும்.

வட மாகாண கடற்றொழில் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பேசாலையில் மீன்பிடித் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக 5 ஆயிரத்து 267 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.