சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றவாது ஒருநாள் போட்டியின் இறுதியில் கண் பார்வையில் சிக்கல் ஏற்பட்டிந்த இலங்கை அணியின் தலைவர் தினேஸ் சந்திமால் தற்போது சாதாரண நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் கலந்துகொள்ளவில்லை.
அவருக்கு பதிலாக ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அணியின் உபதலைவர் நிரோசன் திக்வெல்ல, தினேஸ் சந்திமாலின் கண்ணில் உபாதை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அன்றிரவு அவருக்கு கண்ணுக்கான சிகிச்சை வழங்கப்பட்டிருந்ததாக நிரோசன் திக்வெல்ல குறிப்பிட்டார்.
இந்நிலையில், இலங்கை அணியின் முகாமையாளர் சரித் சேனாநாயக்கவிடம் நேற்று வினவிய போது, சந்திமால் தற்போது சாதாரண நிலையில் உள்ளதோடு, எதிர்வரும் போட்டிகளில் அவர் பங்கேற்பார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
குறித்த போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் கலந்துகொள்ளவில்லை.
அவருக்கு பதிலாக ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அணியின் உபதலைவர் நிரோசன் திக்வெல்ல, தினேஸ் சந்திமாலின் கண்ணில் உபாதை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அன்றிரவு அவருக்கு கண்ணுக்கான சிகிச்சை வழங்கப்பட்டிருந்ததாக நிரோசன் திக்வெல்ல குறிப்பிட்டார்.
இந்நிலையில், இலங்கை அணியின் முகாமையாளர் சரித் சேனாநாயக்கவிடம் நேற்று வினவிய போது, சந்திமால் தற்போது சாதாரண நிலையில் உள்ளதோடு, எதிர்வரும் போட்டிகளில் அவர் பங்கேற்பார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.