18 வயது இளைஞர் பரிதாபமாக பலி

Saturday, 20 October 2018 - 11:09

18+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
பொத்துவில் - அக்கரைபத்து பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற உந்துருளி விபத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உந்துருளியில் பயணித்து கொண்டிருந்த போது திடீர் என பசு ஒன்று குறுக்கிட்டுள்ள நிலையில் உந்துருளியின் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்துள்ள இளைஞர் பொத்துவில் - ஊரானி பிரதேசத்தினை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.