இலங்கை அணியை தோல்வியுறச் செய்த மழை..

Saturday, 20 October 2018 - 17:19

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88..
இலங்கை அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

கண்டி பல்லேகலை மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

இதையடுத்து, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கட்டுக்களை இழந்து 273 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்நிலையில் பதிலுக்கு துப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி,27 ஓவர்கள் வீசப்பட்டு 132 ஓட்டங்களுடன் 02 விக்கட்களை இழந்திருந்த நிலையில், மழை பொழிந்ததன் காரணமாக டக்வத் லுயிஸ் முறைப்பாடி இங்கிலாந்து அணி  18 ஓட்டங்களினால்  வெற்றிப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.