தொடரூந்து விபத்தில் 18 பேர் பலி

Sunday, 21 October 2018 - 19:16

%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+18+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
தாய்வான் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் டைடுங் நகரை நோக்கி சென்ற தொடரூந்தொன்று தடம் புரண்டதில் 18 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் காயமடைந்த 160 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டைடுங் நகரை நோக்கி சென்ற அந்த தொடரூந்தில் 300 பேர் பயணம் செய்ததாக அந்நாட்டு  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி மாலை 4.50 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கும் இந்த தொடரூந்து தடமானது தாய்வானுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பிரபலமானது.

விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.