இலங்கையில் முதலீடுகளை அதிகரிக்க பிரித்தானிய முதலீட்டாளர்கள் இணக்கம்

Tuesday, 23 October 2018 - 7:34

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
இலங்கையில் தங்களது முதலீடுகளை அதிகரிக்க பிரித்தானிய முதலீட்டாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர் .

இலங்கையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து பிரித்தானிய முதலீட்டாளர்களுக்கு தெளிவுப்படுத்துவதற்கான கூட்டம் ஒன்று கடந்ததினம் இடம்பெற்றுள்ளது.

பெருநகர மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம், கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் போன்ற வற்றின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மேலும் பிரித்தானிய முதலீட்டாளர்கள் மற்றும் வணிகர்களும் இதில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.