எதிர்வரும் 7ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை ரத்து செய்யும் வகையில் உயர்நீதிமன்றம் இன்று இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி பத்திரத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரிசீலனையின் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தது.
அதன்படி , குறித்த மனுக்களின் பரிசீலனை நேற்று தொடக்கம் உயர்நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.
மேலும் , இன்றைய தினம் குறித்த மனுக்களை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் இடையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
குறித்த இடையீட்டு மனுக்களும் இன்றைய தினம் உயர்நீதிமன்றில் பரசீலனைக்கு உட்படுத்தப்பட்டன.
பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில், பிரியந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன ஜெயவர்தன ஆகிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அடங்கிய மூவர் ஆயம் இந்த மனுக்களை பரிசீலனை செய்தனர்.
இந்நிலையில் , சட்டமா அதிபர் தனது நிலைப்பாட்டை இன்று உயர்நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
அதன்படி , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அரசியலமைப்பில் உள்ள நிறைவேற்று அதிகாரத்தின் படி நாடாளுமன்றை கலைக்க முடியும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் , நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான மனுக்களை ரத்துச் செய்யுமாறும் சட்டமா அதிபர் உயர்நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், இன்று பிற்பகல் குறித்த மனுக்களின் பரிசீலனை நிறைவு செய்யப்பட்டதாக நீதியரசர்கள் குழாம் அறிவித்திருந்த நிலையில் , மாலை 5 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்திருந்தனர்.
அதன்படி , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றத்தை கலைத்து வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மனு மீதான விசாரணை டிசம்பர் மாதம் 4, 5 மற்றும் 6ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி பத்திரத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரிசீலனையின் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தது.
அதன்படி , குறித்த மனுக்களின் பரிசீலனை நேற்று தொடக்கம் உயர்நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.
மேலும் , இன்றைய தினம் குறித்த மனுக்களை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் இடையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
குறித்த இடையீட்டு மனுக்களும் இன்றைய தினம் உயர்நீதிமன்றில் பரசீலனைக்கு உட்படுத்தப்பட்டன.
பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில், பிரியந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன ஜெயவர்தன ஆகிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அடங்கிய மூவர் ஆயம் இந்த மனுக்களை பரிசீலனை செய்தனர்.
இந்நிலையில் , சட்டமா அதிபர் தனது நிலைப்பாட்டை இன்று உயர்நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
அதன்படி , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அரசியலமைப்பில் உள்ள நிறைவேற்று அதிகாரத்தின் படி நாடாளுமன்றை கலைக்க முடியும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் , நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான மனுக்களை ரத்துச் செய்யுமாறும் சட்டமா அதிபர் உயர்நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், இன்று பிற்பகல் குறித்த மனுக்களின் பரிசீலனை நிறைவு செய்யப்பட்டதாக நீதியரசர்கள் குழாம் அறிவித்திருந்த நிலையில் , மாலை 5 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்திருந்தனர்.
அதன்படி , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றத்தை கலைத்து வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மனு மீதான விசாரணை டிசம்பர் மாதம் 4, 5 மற்றும் 6ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.