பல்லேகலை டெஸ்ட் : முதலாம் நாள் ஆட்டம் நிறைவு

Wednesday, 14 November 2018 - 19:14

%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%3A+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் இன்று நிறைவு பெற்றது.

இந்த போட்டி இன்று பல்லேகலையில் ஆரம்பமானது.

இன்றைய நாள் நிறைவடையும் போது தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் இலங்கை அணி 1 விக்கட்டை இழந்து 26 ஓட்டங்களை பெற்றிருந்தது.

முன்னதாக இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 285 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இங்கிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Sam Curran 64 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்று கொடுத்தார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் தில்ருவன் பெரேரா 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.