ஆடைக் கண்காட்சி

Thursday, 15 November 2018 - 7:58

%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
இந்திய உயர்ஸ்தானிகரகத்தினால் நடத்தப்படுகின்ற இன்டெக்ஸ் சவுத் ஏசிய ஆடைக் கண்காட்சி, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
இலங்கை முதலீட்டு சபை உள்ளிட்ட அமைப்புகளின் பங்களிப்புடன் இந்த கண்காட்சி இடம்பெறுகிறது. 
 
இதில் இந்தியாவின் பல்வேறு நிறுவனங்களது ஆடை உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
 
நிகழ்வில் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங், இலங்கையில் ஆடை உற்பத்தியில் ஈடுபடுகின்ற நிறுவனங்களது உற்பத்திகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.