இலங்கைக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தொடருந்துகள் அடுத்த வாரம் அளவில் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.
ஐ ஏ என் ஸ் இணையத்தளம் இதனைத் தெரிவித்துள்ளது.
தொடருந்துகளை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில் குறித்த தொடருந்துகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.
சென்னையில் வைக்கப்பட்டுள்ள குறித்த தொடருந்துகள், சரக்கு கப்பல்கள் கிடைக்கப்பெற்றதும் இலங்கைக்கு அனுப்பப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.