இன்று நாடாளுமன்றில் ஏற்பட்ட குழப்பநிலையின் போது ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும கத்தி போன்றதொரு ஆயுதத்துடன் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை தாக்கவரும் புகைப்படங்கள் சில தற்போது சமூக வலைத்தளங்களில் வௌியாகியுள்ளன.
அவரின் தாக்குதலில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு விதமாக முயற்சிப்பதும் குறித்த புகைப்படங்கள் மூலம் வௌிப்பட்டுள்ளது.
பாலித தெவரப்பெருமவின் கையில் இருந்த ஆயுதத்தால் தாக்கப்பட்டிருந்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகங்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில , பாலித தெவரப்பெரும கத்தி போன்றதொரு ஆயுதத்துடன் நாடாளுமன்றம் வந்திருந்ததாக குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவரின் தாக்குதலில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு விதமாக முயற்சிப்பதும் குறித்த புகைப்படங்கள் மூலம் வௌிப்பட்டுள்ளது.
பாலித தெவரப்பெருமவின் கையில் இருந்த ஆயுதத்தால் தாக்கப்பட்டிருந்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகங்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில , பாலித தெவரப்பெரும கத்தி போன்றதொரு ஆயுதத்துடன் நாடாளுமன்றம் வந்திருந்ததாக குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.