தொடரூந்துடன் மோதுண்டு இளைஞர் ஒருவர் பலி

Saturday, 17 November 2018 - 13:25

%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
றம்புக்கன தொடக்கம் கோட்டை நோக்கி பயணித்த தொடரூந்துடன் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை குறித்த விபத்து நேர்ந்துள்ளதுடன் 28 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

தொடரூந்து கடவை மூடப்பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞர், வெயங்கொட தொடரூந்து வீதி  குறுக்காக பயணிக்க முற்பட்ட போது இவ்வாறு மோதுண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

விபத்து குறித்து வெயங்கொட காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.