சபாநாயகர் கட்சிசார்பான திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும் - செனவிரத்ன

Sunday, 18 November 2018 - 20:24

%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%87+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னெடுக்கும் பக்கச்சார்பான செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யு.டீ.ஜே. செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

பிரதமர் செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இனைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் நிலை கவலையளிக்கிறது.

அதனை மீண்டும் பழையநிலைக்கு கொண்டுவர வேண்டும்.

நாடாளுமன்றத்தில் கடந்த தினங்களில் ஏற்பட்ட நிலை மீண்டும் உருவாக கூடாதென எதிர்பார்ப்பதாக தெரிவித்த அவர், ஒருதலை பட்சமாக சபாநாயகர் செயற்படுவதை நிறுத்தும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.