இன்று முதல் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

Monday, 19 November 2018 - 7:46

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88
நாடு முழுவதும் இன்று முதல் எதிர்வரும் சில தினங்களுக்கு மழையுடனான காலநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் அருகில் கீழ் வளிமண்டலத்தில் நிலவும் குழப்ப நிலை காரணமாக வடக்கு, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் சில இடங்களில் 150 மில்லி மீட்டர் அளவான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களத்தின் சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் குறிப்பிட்டுள்ளார்.