தமிழ் திரைப்பட நடிகை வீட்டில் சடலமாக மீட்பு...!! காணொளி...

Thursday, 29 November 2018 - 11:07

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...%21%21+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF...
சென்னை வளசரவாக்கத்தில் சினிமா நடிகை ரியாமிகா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

'குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்', 'அகோரி' உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் ரியாமிகா.

இவர் வளசரவாக்கத்தில் உள்ள ராதாநகர் பகுதியில் வாடகை வீட்டில் தனது சகோதரர் பிரகாஷூடன் வசித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று ரியாமிகாவின் காதலன் தினேஷும் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார்.

இந்நிலையில் ரியாமிகா தங்கியிருந்த அறையை பிரகாஷ், தினேஷ் ஆகியோர் நெடுநேரமாக தட்டியப்போது கதவு திறக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த இருவரும் ஜன்னல் வழியாக பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் ரியாமிகா காணப்பட்டுள்ளார்.

தகவலறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் கதவை உடைத்து ரியாமிகாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

படவாய்ப்புகள் குறைந்த நிலையில் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் அவரது செல்போனை கைப்பற்றிய காவல்துறையினர் தற்கொலைக்கு வேறு காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர்.