ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம்...!!

Sunday, 09 December 2018 - 11:19

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D...%21%21
நீதிமன்ற தீர்ப்பு எதுவாக அமைந்தாலும் அதற்கு அமைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தாம் தயார் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
 
பொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
 
தற்போதைய அரசியல் நெருக்கடியை சிலர் கட்சிகளுக்கு இடையிலான பிரச்சினையாக பார்க்கின்றனர்.
 
சிலர் தனக்கும் ரணில் விக்கரமசிங்கவிற்கும் இடையிலான பிரச்சினையாக பாக்கின்றனர்.

இவை எதுவும் இல்லை.

தற்போது நிலவும் அரசியல் ஸ்திரமற்ற தன்மைக்கு காரணம் வெளிநாடுகளின் தாக்கமே என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு நெருக்கடிகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் அடிப்பணியாத நாடாக மக்கள் மத்தியில் எண்ணங்களை ஏற்படுத்தும் தமது முயற்சிக்கு சவாலாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.