மகிந்த உள்ளிட்ட அமைச்சரவைக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு

Wednesday, 12 December 2018 - 13:12

%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81
பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவிகளின் சட்டத்தன்மையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட கேள்வி விராந்து மனு மீதான விசாரணைகள் ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசிய முன்னணியின் 122 நாடாளுமன்ற உறுப்பினர்களால் இந்த மனு முன்வைக்கப்பட்டது.

இதன்அடிப்படையில் பிரதமர் மற்றும் அமைச்சரவைப் பதவிகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று இந்த மனு மீண்டும் மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, எதிர்வரும் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம், 17ம் மற்றும் 18ம் திகதிகளில் தொடர்ச்சியாக விசாரிப்பதற்காக ஒத்திவைக்கப்பட்டது.

அதுவரையில் அமைச்சரவை மற்றும் பிரதமர் பதவிக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.