ஐ.தே.முன்னணியின் விஷேட நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று மாலை

Thursday, 13 December 2018 - 7:30

%E0%AE%90.%E0%AE%A4%E0%AF%87.%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88
ஐக்கிய தேசிய முன்னணியின் விஷேட நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று மாலை 6.00 மணிக்கு அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இதன்போது, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு 117 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

அத்துடன் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.