காங்கிரஸ் வெற்றி தொடர்பில் சோனியாகாந்தி

Thursday, 13 December 2018 - 8:25

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
பாரதிய ஜனதா கட்சியின் எதிர்மறை அரசியலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது என காங்கிரஸின் முன்னாள் தலைவி சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் இடம்பெற்றது.

இதில், ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, மத்திய பிரதேசத்திலும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சேனியா காந்தி, இந்த வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், வெற்றிக்காக ஒத்துழைப்பு வழங்கிய கட்சியினருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.