ஆசிய கிரிக்கட் பேரவையின் வளர்ந்துவரும் அணிக்கான கிரிக்கட் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியது.
கொழும்பு, ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இன்று இடம்பெற்ற இறுதி போட்டியில், இந்திய அணியை 3 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிக் கொண்டது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 270 ஓட்டங்களை பெற்றது.
பதிலளித்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 267 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
இதேவேளை, சுற்றுலா இந்திய அணிக்கும், அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் இன்று நிறைவு பெற்றது.
போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் இந்திய அணி, இன்றைய நாள் ஆட்டம் நிறைவின் போது, 3 விக்கட்டுக்களை இழந்து, 172 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இந்திய அணி சார்பில் அணித் தலைவர் விராட் கோஹ்லி 82 ஓட்டங்களுடனும், அஜின்கியா ரஹானே (Ajinkya Rahane) 51 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காது உள்ளனர்.
முன்னதாக அவுஸ்திரேலிய அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 326 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்திருந்தது.
இந்த நிலையில், அவுஸ்திரேலியா அணி 154 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
கொழும்பு, ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இன்று இடம்பெற்ற இறுதி போட்டியில், இந்திய அணியை 3 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிக் கொண்டது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 270 ஓட்டங்களை பெற்றது.
பதிலளித்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 267 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
இதேவேளை, சுற்றுலா இந்திய அணிக்கும், அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் இன்று நிறைவு பெற்றது.
போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் இந்திய அணி, இன்றைய நாள் ஆட்டம் நிறைவின் போது, 3 விக்கட்டுக்களை இழந்து, 172 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இந்திய அணி சார்பில் அணித் தலைவர் விராட் கோஹ்லி 82 ஓட்டங்களுடனும், அஜின்கியா ரஹானே (Ajinkya Rahane) 51 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காது உள்ளனர்.
முன்னதாக அவுஸ்திரேலிய அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 326 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்திருந்தது.
இந்த நிலையில், அவுஸ்திரேலியா அணி 154 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.