ஹெரோயின் போதை பொருளுடன் 2 பேர் கைது

Sunday, 16 December 2018 - 10:35

%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+2+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
பொரள்ளை மற்றும் கடுநாயக பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதை பொருளை கைவசம் வைத்திருந்த இருவர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் பொரளை - ஹொரகஹபார பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

பொரள்ளை பிரதேசத்தினை சேர்ந்த 59 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை கட்டுநாயக்க பிரதேசத்தில் வைத்து நபர் ஒருவர் 10 மில்லி கிராம் 330 கிராம் ஹெரோயினுடன் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.