யேமன் ஹொடீடா மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட வான்வழி தாக்குதலில் 29 போராளிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையில் தற்போது அமுலில் இருக்கும் யுத்த நிறுத்த காலப்பகுதியினிலேயே இந்த வான் தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வான் தாக்குதல் இடம்பெற்ற பிரதேசம் போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பிரதேசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட 29 போராளிகளில் 22 பேர் ஹவுதி போராளிகள் என இனங்காணப்பட்டுள்ளது.
இதுதவிர, 7 போராளிகள் பிறிதொரு இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.