முதலமைச்சர்கள் 06 பேரின் ஆதரவு இல்லை..?

Sunday, 16 December 2018 - 21:25

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D++06+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88..%3F
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற 6 முதலமைச்சர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காதிருக்க தீர்மானித்துள்ளனர்.

தற்போது முதலமைச்சர் பதவியில் இருக்கின்றவர்களுக்கும், கலைக்கப்பட்ட மாகாணசபைகளின் முதலமைச்சர்களுக்கும் இடையில் நேற்றைய தினம் மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரியவின் இல்லத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இந்த சந்திப்பின்போதே, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மேல்மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

ஊவா தென் மேல் வடமத்திய வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களின் தற்போதைய மற்றும் முன்னாள் முதலமைச்சர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காதிருக்க தீர்மானித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.