சீன சீர்திருத்தம் ஏற்பட்டு 40 வருட நிறைவினை ஒட்டிய நிகழ்வுகள் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வுகளில் முக்கியமாக, சீன ஜனாதிபதிய சி ஜின்பின் நாட்டு மக்களுக்கு உரையொன்றை ஆற்றவுள்ளதாக சீன செய்தி ஸ்தாபனம் சின்ஹுவா தெரிவித்துள்ளது.
முன்னாள் சீனத்தலைவர் டென்ங் சியோபிங் கடந்த 1978ஆம் ஆண்டு சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த சீன சீர்திருத்தத்தினை ஆரம்பித்தார்.
அவரினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் கடந்த 40 வருடங்களாக பலரினால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது.
இதன்காரணமாக சீனா வருமையினை ஒழித்து சர்வதேசத்தில் பொருளாதார பலம் வாய்ந்த நாடாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.