நாடாளுமன்ற எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கும் நோக்கில், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளைய தினம் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்ற கட்டித் தொகுதியில் பிற்பகல் ஒரு மணியளவில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கான நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடு ஒன்று மேற்கொள்ளப்படும் என, நாடாளுமன்ற படைகல சேவிதர் நரேந்திர ஃபெனான்டோ தெரிவித்துள்ளார்.
சபாநாயகரின் பணிப்புரைக்கு அமையை இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அவர் எமது செய்தி சேவைக்கு குறிப்பிட்டார்.
அத்துடன், நாடாளுமன்ற பாதுகாப்பு தொடர்பிலும் இன்று சபாநாயகருடன் கலந்துரையாட எதிர்ப்பார்த்துள்ளதாக, நாடாளுமன்ற படைகல சேவிதர் குறிப்பிட்டுள்ளார்.