தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மேலதிக நுழைவாயில் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகாரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை கருத்துத்திற்கொண்டு, மாத்தறை - கொடகம, காலி – பின்னதுவ ஆகிய பரிமாற்று நிலையங்களில் மேலதிக நுழைவாயில் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அந்த நுழைவாயிலுக்கு தேவையான ஊழியர்களும் அந்தந்த நிலையங்களில் இணைக்கப்பட்டுள்ளனர் என அதிவேக நெடுஞ்சாலை பரிபாலன முகாமையாளர் எஸ்.ஓபநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனால் சுற்றுலா நிமிர்த்தம் தென்பகுதிக்கு வருகைத் தருபவர்கள் சிரமமின்றி தமது பயணத்தை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.