நடிகை தேவயானி மும்பையை பூர்வீகமாக் கொண்டவர்.
தமிழில் காதல் கோட்டை, சூர்யவமசைம், நீ வருவாய் என 75 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார்.
சின்னத் திரையிலும் வெற்றி நாயகியாக வலம் வந்தார்.
இவர் விண்ணுக்கும், மண்ணுக்கும் என்ற படத்தை இயக்கிய ராஜகுமாரனை காதலித்து வந்தார்.
தாய் தந்தையரின் எதிர்ப்பை மீறி நடிகை தேவயானி ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் நடிகை தேவயானி, ராஜகுமாரன் ஆகியோர் தங்களது குழந்தைகளுடன் வீட்டின் முன்பு மண் பானையில் பொங்கல் வைத்து குடும்பத்தினருடன் வழிபட்டார்.