சபரிமலையில் தரிசனம் செய்வதற்காக சென்ற இரண்டு பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தி போராட்டம் செயதமையினால், அவர்கள் மீண்டும் பம்பை திரும்பினர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த இரண்டு பெண்கள் ஆகியோர் இன்று காலை சபரிமலை சன்னிதானம் நோக்கி யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த விடயத்தை அறிந்த ஆண் யாத்திரிகர்கள், குறித்த பெண் யாத்திரிகர்களை நீலிமலையில் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தியுள்ளனர்.
இதையடுத்து, குறித்த பெண் யாத்திரிகர்கள் இருவரும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் பம்பை திரும்பியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.