சச்சினின் சாதனையை முறியடிப்பார் விராட் கோலி - அசாருதீன் நம்பிக்கை

Wednesday, 16 January 2019 - 21:16

+%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF+-+%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
இந்திய கிரிக்கட் அணித் தலைவர் விராட் கோலி, எந்தவித காயமும் இல்லாமல் உடற்தகுதியுடன் இருந்தால் 100 சதங்களைப் பெறுவார் என இந்திய அணியின் முன்னாள் தலைவர் மொஹமட் அசாருதீன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், விராட் கோலி தனது 39 ஆவது சதத்தை பதிவு செய்தார்.

இந்த நிலையில், இதனைத் தெரிவித்துள்ள அசாருதீன், விராட் கோலியை போன்று தொடர்ச்சியாக விளையாடுவது சில வீரர்களால் மட்டுமே முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது உலகில் உள்ள வீரர்களை விட அதிக அளவில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடும் திறமையை விராட் கோலி பெற்றுள்ளார் என்றும் அசாருதீன் தெரிவித்துள்ளார்.