இளம் கிரிக்கட் வீரர் மரணம்

Wednesday, 16 January 2019 - 21:59

%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+
இந்தியாவின் கொல்கத்தாவில் கிரிக்கெட் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது 21 வயது இளைஞர் ஒருவர் மைதானத்திலே மரணமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பெங்கால் கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் 'டிவிசன் 1' லீக் போட்டியில் மிலன் சமிதி - பைக்பாரா என அழைக்கப்படும் இரு அணிகளுக்கு இடையில் இடம்பெறவிருந்த போட்டிக்கான பயிற்சியின் போதே அவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மைதானத்தில் மயங்கி விழுந்த இளைஞர், சக வீரர்களால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கின்ற போதே மரணமடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.