தலவாக்கலையில் காட்டுத் தீ பரவல்

Thursday, 17 January 2019 - 19:15

%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
தலவாக்கலை தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் உள்ள காட்டுப்பகுதியில் இன்று காலை ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக சுமார் 2 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது.
 
குறித்த பகுதியில் நிலவிய கடும் வெயில் மற்றும் காற்று காரணமாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
பின்னர், தலவாக்கலை காவற்துறையினர, விஷேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
 
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.