சுற்றுலா இந்திய அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான 3வதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 7 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
மெல்போர்ன் (Melbourne) மைதானத்தில் நடைப்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்தியா அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.
அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 48.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 230 ஓட்டங்களை பெற்றது.
அந்த அணி சார்பில் பீட்டர் ஹொன்ஸ்கொம் 58 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் சஹால் அபாரமாக பந்து வீசி ஆறு வீக்கட்டுக்களை வீழ்த்தினார்.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி 49.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
அந்த அணி சார்பில் மகேந்திரசிங் தோனி ஆட்டமிழக்காமல் 87 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துடன், கெடார் ஜாதவும் ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
எனவே 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
மெல்போர்ன் (Melbourne) மைதானத்தில் நடைப்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்தியா அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.
அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 48.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 230 ஓட்டங்களை பெற்றது.
அந்த அணி சார்பில் பீட்டர் ஹொன்ஸ்கொம் 58 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் சஹால் அபாரமாக பந்து வீசி ஆறு வீக்கட்டுக்களை வீழ்த்தினார்.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி 49.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
அந்த அணி சார்பில் மகேந்திரசிங் தோனி ஆட்டமிழக்காமல் 87 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துடன், கெடார் ஜாதவும் ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
எனவே 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.