நாட்டின் கடல் சார்ந்த உணவு பொருள் உற்பத்திகளின் ஏற்றுமதிகள் அதிகரித்துள்ளன.
கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
மீன் இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டம் வெற்றியளித்துள்ளதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கடந்த வருடம் 42.08 பில்லியன் ரூபா பெறுமதியான கடல் சார்ந்த உணவு பொருள் உற்பத்திகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.