73 பேர் பலி..

Sunday, 20 January 2019 - 14:48

+73+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF..
மெக்ஸிகோவின் மத்திய பகுதியில், எரிபொருளை கொண்டு செல்லும் பாரிய குழாய் ஒன்று வெடித்து தீப்பற்றியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்வடைந்துள்ளது. 

குழாய் வெடித்து எரிபொருள் கசிவு ஏற்பட்டு, தீப்பரவல் இடம்பெற்றுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன்போது 74 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
எரிபொருள் வெளியேரிய நிலையில், அதனை பெற்றுக் கொள்ளுவதற்கான ஒன்றுக் கூடியவர்களே இந்த விபத்துக்கு முகம் கொடுத்துள்ளனர்.

எரிபொருள் குழாயில் எவ்வாறு திடீர் வெடிப்பு ஏற்பட்டது என்பது தொடர்பில் உடனடியாக கண்டறியப்படவில்லை.