படைப்புழுக்கள் காரணமாக விடுமுறை ரத்து

Sunday, 20 January 2019 - 16:37

%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
விவசாய திணைக்களத்தின் அனைத்து விரிவாக்கல் சேவை அதிகாரிகளினதும் விடுமுறைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

படைப்புழுத் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள நிலைமையினை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயம் டபில்யூ.எம்.டபில்யூ.வீரகோன் தெரிவித்துள்ளார்.

அதேபோல் படைப்புழுத் தாக்கம் காணப்படும் பிரதேசங்களுக்கு பல்கலைக்கழக விவசாய பீட மாணவர்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.