போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் முறைப்பாடு செய்ய புதிய தொலைப்பேசி இலக்கம்

Sunday, 20 January 2019 - 17:14

%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய 1984 என்ற தொலைப்பேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

அதேபோல் , போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரமொன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு - முல்லியாவலை வித்தியானந்தன் மகா வித்தியாலயத்தில் ஜனாதிபதி தலைமையில் இதன் ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 28ம் திகதி வரை இந்த வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.