ஹெரோயினுடன் 03 பேர் கைது

Sunday, 20 January 2019 - 17:51

%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+03+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+
டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதால உலக குழு உறுப்பினரான மாகந்துரே மதுஷின் 3 ஆதரவாளர்கள் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பத்தரமுல்லை தலங்கமவில் கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களின் வசமிருந்து, 1.33 கிலேகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நுகேகொடை போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் தலங்கமை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.