பாகிஸ்தானில் பேருந்து ஒன்றுடன், டீசல் கொள்கலன் பாரவூர்தி ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர்.
பலுசிஸ்தான் மாகாணத்தின் லஸ்பெலா மாவட்டத்தில் நேற்றிரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அதில் 16 பேர் பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்தும், டீசல் கொள்கலன் பாரஊர்தியும் மோதியதில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பலர் மரணித்துள்ளதனால், சடலமாக மீட்கப்பட்டவர்களை அடையாளம் காண முடியவில்லை என்றும், இந்த நிலையில், மரபணு சோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் தகவலகள் தெரிவித்துள்ளன.
பலுசிஸ்தான் மாகாணத்தின் லஸ்பெலா மாவட்டத்தில் நேற்றிரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அதில் 16 பேர் பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்தும், டீசல் கொள்கலன் பாரஊர்தியும் மோதியதில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பலர் மரணித்துள்ளதனால், சடலமாக மீட்கப்பட்டவர்களை அடையாளம் காண முடியவில்லை என்றும், இந்த நிலையில், மரபணு சோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் தகவலகள் தெரிவித்துள்ளன.