உலகில் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், சென்னையில் உள்ள ஒரு கல்லூரி மாணவரை ஓட ஓட விரட்டி வெட்டும் காணொளி காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
சென்னை அரும்பாக்கம் பகுதியில் பெரியார் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவர்களுக்கு இடையே சில நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறு தற்போது கொலை செய்யும் அளவிற்கு விபரீதத்தில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கொடூர சம்பவம் நேற்று முன்தினம் காலை 11:30 மணியளவில் வீதியின் அருகில் அரங்கேறியுள்ளது.
இந்த கொடூர காட்சியானது அந்த பகுதியில் இருக்கும் விற்பனை நிலையமொன்றில் ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
அதன் சிசிடிவி காணொளி இப்போது வைரலாக பரவி வருகிறது.
அந்த காணொளியில் 3 பேர் கொண்ட குமபல் ஒரு இளைஞரை துரத்தி வந்து வாளால் வெட்டுகின்றனர்.
அந்த இளைஞர் தப்பி ஓட முயன்றும் அவர்களிடமிருந்து தப்பிக்க முடியவில்லை.
இறுதியில் பலத்த காயத்துடன் கீழே விழுந்த அந்த இளைஞரை கும்பலில் ஒரு நபர் சாகும் வரை விடாமல் வெட்டியுள்ளார்.
இதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.