கோர விபத்தில் சிக்கி தாய் மற்றும் மகள் பலி...! இருவர் காயம்

Wednesday, 23 January 2019 - 16:42

%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF...%21+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
அனுராதபுரம் - புத்தளம் பிரதான வீதி பொதானேகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாய் மற்றும் மகள் உயிரிழந்து மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

அதிவேகமாக பயணித்த கெப் ரக வாகனம், முச்சக்கர வண்டியுடன் மோதுண்டு இன்று குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

73 வயது தாய் மற்றும் 54 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் மகளின் கணவர் காயமடைந்து, அனுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.