ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றப்படுவதனை சர்வதேச சமூகம் உறுதிப்படுத்த வேண்டும் - சம்பந்தன் கோரிக்கை

Wednesday, 23 January 2019 - 21:33

%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
ஜெனீவா தீர்மானத்தின் உள்ளடக்கங்கள், குறித்த காலவரையறைக்குள் நிறைவேற்றப்படுவதனை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் சர்வதேச சமூகத்தினால் முன்னெடுக்கப்படவேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானிய வெளிவிவகார பிரிவின் தெற்காசிய திணைக்களத்தின் தலைவரும் இந்தியாவின் ஒருங்கிணைப்பாளருமான பர்கஸ் ஓல்ட்டுடன் நேற்று நடத்திய சந்திப்பின்போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ள நிலையில், அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதனை உறுதிசெய்வது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

சர்வதேச சமூகம் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதனை உறுதி செய்யவேண்டும்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மனமானது தொடர்ந்து முன்னெடுக்கப்படவேண்டும் என சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், அரசியல்வாதிகளின் அசமந்தபோக்கே அதிகாரப் பரவலாக்கத்தை முன்னெடுப்பதில் உள்ள உண்மையான பிரச்சினையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.