இவரை தெரியுமா? பொது மக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறை

Sunday, 17 February 2019 - 13:21

%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88
சிற்றூர்திகளை இறக்குமதி செய்வதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபரொருவரை கைது செய்வதற்காக காவல்துறையினர் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சிற்றூர்திகளை கொள்வனவு செய்வதாக கூறி 43 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் கொழும்பு மோசடி விசாரணை பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறு பண மோசடியில் ஈடுபட்டிருந்தமை காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சமன் குமார என்ற குறித்த நபர், இலக்கம் 106/A திஸ்ஸ வீதி தங்காலை என்ற முகவரியில் வசித்து வருபவர் என தெரியவந்துள்ளது.

இவர் தொடர்பில் தகவல் அறிந்தால் 0112679593  என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக மோசடி விசாரணை பிரிவின் இயக்குனருக்கோ அல்லது 0112673571 என்ற இலக்கம் ஊடாக மோசடி விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரிக்கோ அறிவிக்க முடியும்.

இதனுடன் 0112673594 என்ற இலக்கம் ஊடாக மோசடி விசாரணை பிரிவிற்கும் சந்தேக நபர் தொடர்பில் தகவல் வழங்க முடியும் என காவல்துறை தெரிவித்துள்ளது.