தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து பாதீட்டு வாக்கெடுப்பின் போது அறிந்து கொள்ள முடியும் என ராஜாங்க அமைச்சர் அஷோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
குருநாகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிலர் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு வெளியிட்டுள்ளனர்.
அந்த உறுப்பினர்கள் தொடர்பான விபரங்கள் இன்னும் ஓரிரு தினங்களில் தெரியவரும் என ராஜாங்க அமைச்சர் அஷோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.